தப்பு கொடி (கிரிணி பழம் )...
நாம் விதைக்காமல் தானே முளைக்கும் விதைகளை தப்பு விதை/செடி என்றும், நாம் பறிக்கும் போது தவறவிடும் காய்களை/ பூக்களை தப்பு காய்/பூ என்று எங்கள் ஊரில் அழைப்பார்கள், அதை போன்ற தப்பு செடி இது. குப்பை கலந்து வைத்த பின் நிறைய செடிகள் முளைத்தன. சரி பறித்து இதற்கே குப்பையாக போடலாம் என்று நினைத்த போது இந்த கொடி பூத்துவிட்டது. அதனால் தப்பி பிழைத்து இரண்டு நாட்களில் காய் பூவும் பூத்தது. காய் முற்றி , செடிலியே பழுக்கட்டும் என்று விட்டுவைத்தோம், நேற்று அணிலோ, காகமோ லேசாக கொறித்துள்ளது.பறித்துவிட்டேன் இன்று சாப்பிட்டுவிடுவோம்.
நாம் விதைக்காமல் தானே முளைக்கும் விதைகளை தப்பு விதை/செடி என்றும், நாம் பறிக்கும் போது தவறவிடும் காய்களை/ பூக்களை தப்பு காய்/பூ என்று எங்கள் ஊரில் அழைப்பார்கள், அதை போன்ற தப்பு செடி இது. குப்பை கலந்து வைத்த பின் நிறைய செடிகள் முளைத்தன. சரி பறித்து இதற்கே குப்பையாக போடலாம் என்று நினைத்த போது இந்த கொடி பூத்துவிட்டது. அதனால் தப்பி பிழைத்து இரண்டு நாட்களில் காய் பூவும் பூத்தது. காய் முற்றி , செடிலியே பழுக்கட்டும் என்று விட்டுவைத்தோம், நேற்று அணிலோ, காகமோ லேசாக கொறித்துள்ளது.பறித்துவிட்டேன் இன்று சாப்பிட்டுவிடுவோம்.