Tuesday, June 30, 2015

கம்பங்கூழ்



முதல் நாள் இரவு ஊர வைத்த கம்புச்சோறை தேவைக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு உருண்டைகளை எடுத்து ஊர வைத்த தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கரைத்து குடிக்கலாம். தேவைப்பட்டால் மோர் சேர்த்துக்கொள்ளலாம். தொட்டுக்கொள்ள சின்ன வெங்காயம், மோர் மிளகாய், ஊறுகாய், சுண்ட குழம்பு நன்றாக இருக்கும். சிலர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கம்பங்கூழ்ழோடு கலந்து குடிப்பார்கள். எனக்கு சின்ன வெங்காயத்தை கடித்துக்கொள்ள பிடிக்கும். 
படத்தில்  கம்பங்கூழ், காலிபிளவர் வறுவல், சின்ன வெங்காயம்

மீதம் இருக்கும் கம்பு உருண்டைகள் முழுகும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் பயன்படுத்தலாம். இரண்டு நாள் வரை வைத்துப்பயன்படுத்தலாம் அதற்கு மேல் ஆனால் புளித்து விடும்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...