Wednesday, May 20, 2015

கம்பு சோறு/ கம்பங் களி

படத்தில் : கம்பு சோறு , கத்தரிக்காய், நில கடலை  புளி குழம்பு

வெயில் தொடங்கி விட்டால், வீட்டில் அடிக்கடி  கம்பு சோறு செய்வோம். எனக்கு கம்பு சோறு குழம்பு தொட்டு சாப்பிட பிடிக்கும்.  அம்மா அவர்களது சிறு வயதில் கம்பு, சோளம், நெல் எல்லாம் உரலில் இடித்து சோறு செய்த பழக்கம் உண்டு. கம்பு சோறு செய்வதை பற்றி அம்மா அதிகம் விளக்கங்கள் சொல்லி இருந்தாலும்,இதை செய்ய கற்று கொண்டது அத்தையிடம் தான்.

பழைய முறை படி இதை செய்வது பெரிய வேலை, கம்பை இடித்து, புடைத்து, தோல் நீக்கி, மாவை தனியாகவும், குருணையை தனியாகவும் பிரித்து, தண்ணீரை கொதிக்க வைத்து குருணையை போட்டு, அது முக்கால் பதம் வெந்தவுடன், கம்பு மாவை சேர்த்து வேகவைக்க வேண்டும். ஆனால் இப்போது இடிக்க தேவை இல்லை, grinderஇல் அரைத்து சுலபமாக செய்யலாம்.

தேவை :
கம்பு - 1/4 படி
(இந்த முறை நான் பயன்படுத்தியது  நாட்டு கம்பு.   நாட்டு கம்பு தோல்  நீக்குவது சற்று கடினம். லேசாக தண்ணீர் தெளித்து ஊறவைத்து mixiல் pluse modeல் இரண்டு சுற்று சுற்றினால் தோல் வந்துவிடும். புடைத்து  அல்லது நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். இது பற்றி இன்னொரு பதிவில்  தெளிவாக சொல்கிறேன்  நாட்டு கம்பு தோல் நீக்கப்பட்டு சில கடைகளில் கிடைக்கிறது. விலை கொஞ்சம் அதிகம். கம்பெனி கம்பு என்றால் அப்படியே பயன் படுத்திகொள்ளலாம் . கல் இருந்தால் அரித்து கொள்ளவும்.)

செய்முறை :

  • கம்பை 2 அல்லது 3 மணி நேரம் ஊறவைத்து கொரகொரப்பாக( ஒன்று இரண்டாக ) அரைத்து கொள்ளவும்.   மாவு பதம், தோசை மாவு  போல் சற்று நீர்த்து இருக்க வேண்டும். 
  • அடி கனமான பாத்திரத்தை(cooker without  lid  அடுப்பில் குறைந்த(medium) தீயில் வைத்து மாவை ஊற்றி கை விடாமல் கிளற வேண்டும் . இன்னொரு அடுப்பில் கொஞ்சம் வெந்நீர் வைக்கவும்.




  • சற்று நேரத்தில் மாவு கெட்டியாக தொடங்கும், அப்போது சிறிது வெந்நீர் சேர்த்து கிளறவும். மீண்டும் மாவு கெட்டியாக தொடங்கும், சிறிது வெந்நீர் சேர்த்து கிளறவும்...வெந்நீர் சேர்க்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். மாவு வேக தேவையான நீர் மட்டும் சேர்த்தால்  போதும். மாவு முழுதாக வேகும் வரை இப்படி செய்யவும் (மாவு ஒரு மாதிரி வெள்ளை நிறத்தில் இருந்து சற்று பள பளப்பாக மாறும். opaque  to  translucent ) 



  • மாவு வெந்தவுடன்  அடுப்பை மிகவும் குறைந்த தீயில் (sim ) வைத்து.மூடி போட்டு, 10 நிமிடம் புழுங்க விடவும். தண்ணீரில் கையை நனைத்து  கொஞ்சம் மாவை எடுத்து உருட்டினால் கையில் ஒட்டாமல் உருட்ட வரவேண்டும். இது தான் சரியான பதம். கம்பு சோறு/ கம்பங் களி இப்போது தயார்.


கம்பங் களியை  சூடாக சாம்பார் / புளி குழம்பு  ஊற்றி சாபிடலாம். குறிப்பாக முருங்கை கீரை குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.



மீதம் இருக்கும் கம்பங் களியை உருண்டைகளாக உருட்டி, உருண்டைகள் முழுகும் வரை சோறு விடித்த கஞ்சி கொஞ்சம் + தண்ணீரில் போட்டு வைத்து மறு நாள்   கம்பங் கூழாக குடிக்கலாம்.  கம்பங் கூழ் அடுத்த பதிவில்... 
  


குறிப்பு :
  • மாவு அரைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஒன்று இரண்டாக அரைத்தால் போதும்.
  • மாவை போல் 3 அல்லது 4 மடங்கு தண்ணீர்( வெந்நீர்) தேவை படும்.
  • 40 or 45 நிமிடம் முழுதாக தேவை படும் இம்முறையில் சமைப்பதற்கு. 






















1 comment:

  1. அருமையன பதிவு. மிகவும் பயனுள்ளதக இருந்தது. முடிந்தால் இதன் பயன்களையும் குறிப்பிடவும். மிக்க நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...