பழம் சாப்பிட வந்தது யாரென்று பாருங்கள்...
என் சமையல் பக்கங்கள்
Saturday, December 12, 2020
Thursday, December 10, 2020
யாரோ வீட்டுக்கு வராங்க...
அடுப்படியோடு இனைந்த service area உண்டு, அது வழியே குரங்குகள் வீட்டுக்குள் வந்து விடும். அதனால் அந்த கதவை ஆள் இல்லாத போது முடி வைப்போம். நேற்று கனிந்த வாழைப்பழம் ஒன்றை குரங்கு வந்தால் எடுத்து கொள்ளட்டும் என்று சன்னல் அருகே வைத்தேன். மாலையில் பார்த்த போது குருவிகள் கொத்திய தடங்கள் இருந்தன. இன்றும் வைத்து பார்ப்போம் என்று, சின்ன பழம் ஒன்றை வைத்தேன். திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்று வந்து பார்த்தால், பழத்தை உண்டு இருகிறார்கள். சில சமயங்களில் தேன் சிட்டுக்கள், கருப்பு சின்னான்கள் வந்து பார்த்துள்ளேன்.. இன்று வந்தது யார் என்று தெரியவில்லை. நாளை கவனித்து பார்க்கிறேன்..
Saturday, March 3, 2018
மாடியில்...
கடந்த சில நாட்களாக மாடி தோட்டத்தில் எந்த கவனமும் இல்லை. புதிதாக எந்த செடிகளும் நடவில்லை. இருப்பினும் சென்ற முறை மிளகாய் காயவைத்த போது எஞ்சிய விதைகளை ஒரு தொட்டியில் தூவினேன் . நிறைய செடிகள் முளைத்தது, பிரித்து பல தொட்டிகளில் வைத்தேன், அணைத்தும் காய்க்க தொடங்கிவிட்டது. ஒரு தக்காளி செடியும், கடுகு செடியும் தானே வளர்ந்து காய்த்தும் விட்டது.
Monday, August 29, 2016
சத்து மாவு
சத்து மாவு கஞ்சி என் மகள்களுக்கு பிடித்த பானம். ஒரு வயதில் இருந்து இதை அவர்களுக்கு கொடுத்து கொண்டுயிருக்கிறேன். இந்த சத்து மாவு எப்படி தயாரிப்பது என்பதை பற்றிய பதிவு இது.
இதில் உள்ள தானியங்களை உங்கள் சுவைக்கு ஏற்ற வாறு குறைத்து அல்லது கூட்டி கொள்ளலாம். அணைத்து தானியங்களையும் சுத்தம் செய்து, வெய்யிலில் காயவைத்து, அடி கனமான பாத்திரத்தில் கொஞ்சம்கொஞ்சமாக போட்டு சிறு தீயில் நன்றாக வறுத்து ஆற வைத்து அரைத்தால் சாது மாவு தயார். இதை கொண்டு கஞ்சி. கொழுக்கட்டை, இனிப்பு அடை , புட்டு என்று நமது தேவைக்கு தக்கவாறு பயன்படுத்தி கொள்ளலாம்.
சம்பா கோதுமை- 1/2 kg
கம்பு - 1 kg
கேழ்வரகு - 1 kg
வெள்ளை சோளம் - 1/4 kg
சிகப்பு அரிசி / கவுனி அரிசி/ புழுங்கல் அரிசி- 1/4kg
கருப்பு உளுந்து ( உடைத்தது )- 1/4 kg
பார்லி -1/4 kg
நில கடலை - 1/4 kg
பாசி பயிறு -1/4 kg
கொள்ளு - 1/4 kg
பொட்டு கடலை - 100gm
மக்கா சோளம் - 100 gm
முந்திரி - 200 gm
பாதாம் - 200 gm
சுக்கு -100gm
ஏலக்காய் -10gm
கல்உ ப்பு - 1 கை
கல் உப்பையும் வறுத்து கொள்ளவும். சுக்கை தோல் நீக்கி லேசாக தட்டி போடவும் (வறுக்க தேவையில்லை ). தண்ணீர் படாமல் பார்த்து கொண்டால் 6 மாதம் வரை பயன்படுத்தலாம். தானியங்களை முளை கட்டியும் பயன்படுத்தலாம்.
Thursday, July 14, 2016
தப்பு கொடி (கிரிணி பழம் )...
தப்பு கொடி (கிரிணி பழம் )...
நாம் விதைக்காமல் தானே முளைக்கும் விதைகளை தப்பு விதை/செடி என்றும், நாம் பறிக்கும் போது தவறவிடும் காய்களை/ பூக்களை தப்பு காய்/பூ என்று எங்கள் ஊரில் அழைப்பார்கள், அதை போன்ற தப்பு செடி இது. குப்பை கலந்து வைத்த பின் நிறைய செடிகள் முளைத்தன. சரி பறித்து இதற்கே குப்பையாக போடலாம் என்று நினைத்த போது இந்த கொடி பூத்துவிட்டது. அதனால் தப்பி பிழைத்து இரண்டு நாட்களில் காய் பூவும் பூத்தது. காய் முற்றி , செடிலியே பழுக்கட்டும் என்று விட்டுவைத்தோம், நேற்று அணிலோ, காகமோ லேசாக கொறித்துள்ளது.பறித்துவிட்டேன் இன்று சாப்பிட்டுவிடுவோம்.
நாம் விதைக்காமல் தானே முளைக்கும் விதைகளை தப்பு விதை/செடி என்றும், நாம் பறிக்கும் போது தவறவிடும் காய்களை/ பூக்களை தப்பு காய்/பூ என்று எங்கள் ஊரில் அழைப்பார்கள், அதை போன்ற தப்பு செடி இது. குப்பை கலந்து வைத்த பின் நிறைய செடிகள் முளைத்தன. சரி பறித்து இதற்கே குப்பையாக போடலாம் என்று நினைத்த போது இந்த கொடி பூத்துவிட்டது. அதனால் தப்பி பிழைத்து இரண்டு நாட்களில் காய் பூவும் பூத்தது. காய் முற்றி , செடிலியே பழுக்கட்டும் என்று விட்டுவைத்தோம், நேற்று அணிலோ, காகமோ லேசாக கொறித்துள்ளது.பறித்துவிட்டேன் இன்று சாப்பிட்டுவிடுவோம்.
Wednesday, April 20, 2016
பூக்கள்....
செடிகளில் பூக்கும் பூக்களை விட பூ பூக்கும் மரங்கள் என்னை சிறுவயதில் இருந்து மிகவும் கவர்கிறது. மரமல்லி, சரகொன்றை, மகிழம்பூ, செண்பகபூ, நாகலிகம் போன்ற மரங்கள் . அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும் இந்த மரங்களை பார்க்கும் போது சிறு வயதில் நான் பார்த்த மரங்களும், அதை கடக்கும் போது வந்த மணமும் நினைவில் வரும். இப்போது ஊரெங்கும் கொன்றை பூக்கள் அழகாக பூத்துள்ளது. பள்ளிக்கு நகர பேருந்தில் பயணிக்கும் போது, ஒரு பேருந்து நிறுத்தத்தில் இருந்த சரகொன்றை மரத்தில் அதன் அழகிய மஞ்சள் பூக்களை பார்த்தவாறு பயணித்தது இப்போதும் மறக்கவில்லை( சில வருடங்களில் அந்த மரம் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியில் வெட்டப்பட்டது).
ஆனால் இந்த புங்க மரம் பற்றி தெரிந்த போதும், சிகைக்காயில் சேர்க்க அதன் விதைகளை தேடி அலைந்த போதும், அதன் பூக்களை கவனித்தது இல்லை . சென்ற வருடம் மார்ச் மாதத்தில் ஒரு நாள், சிக்னலில் காத்துகொண்டு இருந்தபோது தான் இதன் பூக்களை முதன்முதலில் பார்த்தேன். அப்போதும் பூக்களை முதலில் கவனிக்கவில்லை, அதனை சுற்றி பறந்த தேனிகளை தான் பார்த்தேன். இவ்வளவு தேனிகள் ஏன் இங்கு என்று கவனித்தபோது தான் பூக்கள் தெரிந்தன. அடர்த்தியான நிறங்கள் இல்லை ஆனால் அழகான நிறம், கொத்துத் கொத்தாய் அவ்வளவுப் பூக்கள். அப்போது இருந்து புங்க மரத்தை பார்க்கும்போதேல்லாம் பூக்கள் இருகிறதா என்று கவனிப்பேன். இந்த மாதங்கள் கொன்றை பூக்கள் போலவே புங்கம்பூக்கள் பூக்கும் பருவம் போல், எங்கள் வீட்டு வாசலில் உள்ள மரத்தில்லும் பூ பூத்து உள்ளது. பார்த்து ரசித்து படமெடுத்து, மகளுக்கும் காட்டினேன். தலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றாள், ஒரு சிறிய கொத்து பறித்து அவளுக்கு சூடி அழகும் பார்த்தேன் .
ஆனால் இந்த புங்க மரம் பற்றி தெரிந்த போதும், சிகைக்காயில் சேர்க்க அதன் விதைகளை தேடி அலைந்த போதும், அதன் பூக்களை கவனித்தது இல்லை . சென்ற வருடம் மார்ச் மாதத்தில் ஒரு நாள், சிக்னலில் காத்துகொண்டு இருந்தபோது தான் இதன் பூக்களை முதன்முதலில் பார்த்தேன். அப்போதும் பூக்களை முதலில் கவனிக்கவில்லை, அதனை சுற்றி பறந்த தேனிகளை தான் பார்த்தேன். இவ்வளவு தேனிகள் ஏன் இங்கு என்று கவனித்தபோது தான் பூக்கள் தெரிந்தன. அடர்த்தியான நிறங்கள் இல்லை ஆனால் அழகான நிறம், கொத்துத் கொத்தாய் அவ்வளவுப் பூக்கள். அப்போது இருந்து புங்க மரத்தை பார்க்கும்போதேல்லாம் பூக்கள் இருகிறதா என்று கவனிப்பேன். இந்த மாதங்கள் கொன்றை பூக்கள் போலவே புங்கம்பூக்கள் பூக்கும் பருவம் போல், எங்கள் வீட்டு வாசலில் உள்ள மரத்தில்லும் பூ பூத்து உள்ளது. பார்த்து ரசித்து படமெடுத்து, மகளுக்கும் காட்டினேன். தலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றாள், ஒரு சிறிய கொத்து பறித்து அவளுக்கு சூடி அழகும் பார்த்தேன் .
Tuesday, September 29, 2015
இயற்கையில் எந்தனை வண்ணம்
இத்தனை வண்ணத்தில் வெட்டுக்கிளி பார்ப்பது இதுதான் முதல்முறை. பச்சை நிறத்திலும், மர நிறத்திலும் சிலமுறை மஞ்சள் நிறத்தில் சிறிய வெட்டுக்கிளிகளை மட்டுமே பார்த்திருக்கிறேன். இன்று மகளை
பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது பட்டாம்பூச்சிகளை வேடிக்கை பார்த்துகொண்டு வந்தோம், அப்போது இந்த வெட்டுக்கிளிகள் எருக்கம் பூ செடியில் இருந்தன.
Subscribe to:
Posts (Atom)